திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு விழா நடைபெறும் இடத்தில் 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் களஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வரும் 6, 7-ம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.