பாதுகாப்பு படையினருக்கு உமர் அப்துல்லா பாராட்டு

19 hours ago 2

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்மு, அக்னோர்,சம்பா, பாரமுல்லா, குப்வாரா ஆகிய ஜம்மு பகுதிகளில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியது. அதை இந்திய படையினர் வெற்றிகரமாக முறியடித்தனர். இந்த சம்பவத்தையடுத்து காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று ஜம்முவில் உள்ள பகுதிகளை ஆய்வு செய்தார்.

அதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில்,‘‘ஜம்முவில் பொதுமக்களை குறிவைத்து டிரோன்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்திய பாதுகாப்புப் படைகள் விரைவாகவும், திறமையாகவும் செயல்பட்டு சதி முயற்சியை முறியடித்தனர். பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது’’ என்றார்.

 

The post பாதுகாப்பு படையினருக்கு உமர் அப்துல்லா பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article