இஸ்லாமாபாத்: ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட கைதிகளின் பட்டியலின்படி பாகிஸ்தான் சிறையில் 266 இந்திய கைதிகள் இருந்தனர். இவர்களில் 49 பேர் பொதுமக்கள், 217 பேர் மீனவர்கள். இதேபோல் இந்தியாவில் உள்ள சிறையில் மொத்தம் 462 பாகிஸ்தானியர்கள் உள்ளனர்.
இவர்களில் 81 பேர் மீனவர்கள். தண்டனை காலம் முடிந்து 22 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் மாலிர் சிறையில் இருந்து நேற்று முன்தினம் விடுவித்துள்ளதாக பாக். அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாகா எல்லை வழியாக இந்திய மீனவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
The post பாக். சிறையில் இருந்து 22 மீனவர்கள் விடுவிப்பு appeared first on Dinakaran.