பாக்.கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்த யு.ஏ.இ.: பின்னணியில் ஜெய் ஷா..?

18 hours ago 2

துபாய்,

6 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி ராவல்பிண்டி, கராச்சி, முல்தான், லாகூர் ஆகிய 4 நகரங்களில் நடந்தது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடக்க இருந்த 27-வது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ்-பெஷாவர் ஜால்மி அணிகள் மோத இருந்தன. ஆனால் பாதுகாப்பு அச்சத்தால் இந்த ஆட்டத்தை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை.

இதனிடையே பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் முகாம் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவியது. இந்த போர்ப்பதற்றம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. ஒரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.

இந்த மோதன்போது பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியம் அருகில் நடந்த டிரோன் தாக்குதலில் கட்டிடம் சேதமடைந்ததுடன், சிலர் காயம் அடைந்தனர். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், எல்லா அணி நிர்வாகத்துடன் அவசர ஆலோசனை நடத்தியது. இதன் முடிவில் பி.எஸ்.எல். தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வீரர்கள் பத்திரமாக துபாய் அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து தங்களது நாடுகளுக்கு சென்றனர்.

இதனிடையே பி.எஸ்.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் (யு.ஏ.இ.) நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த கோரிக்கையை ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பி.எஸ்.எல். தொடரை தங்கள் மைதானத்தில் நடத்த மறுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதன் பின்னணியில் ஜெய் ஷா உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இது பற்றி அமீரக வாரியத்தின் நிர்வாகி ஒருவர் பேசியது பின்வருமாறு:- "நாங்கள் பி.சி.சி.ஐ.-க்கும் ஜெய் ஷா பாய்க்கும் கடமைப்பட்டுள்ளோம்," என்று கூறினார்.

இதனால் ஜெய் ஷாவால்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை யு.ஏ.இ. நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Read Entire Article