டெல்லி: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக மூட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக இஸ்லாமாபாத் தூதரகத்தை முதற்கட்டமாக் வீசா உள்ளிட்ட பணிகளுக்கான மட்டும் திறந்து வைத்து மற்ற அதிகாரிகளை அங்கிருந்து டெல்லி அழைத்து வர ஒன்றிய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தூதரகத்தை மூடுவதற்கான பரிந்துரையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒன்றிய அரசுக்கு வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் மிக மோசமான தீவிரவாத தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
The post பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக மூட ஒன்றிய அரசு முடிவு..? appeared first on Dinakaran.