
சண்டிகர்,
பஹல்காம் தாக்குதல், இந்தியா - பாகிஸ்தான் மோதலை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே தற்போது அமைதி திரும்பியுள்ளது. இதனிடையே, மோதலை தொடர்ந்து இந்தியாவில் பாகிஸ்தானுக்கு உளவு தகவல்களை கொடுத்ததாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உடன் தொடர்பில் இருந்த பஞ்சாப்பை சேர்ந்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப்பின் அமிர்தசரசை சேர்ந்த ராணுவ வீரர் குர்பிரீத் சிங் ஜம்முவில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். அவர் 2016ம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்திய ராணுவத்தின் ரகசிய தகவல்களை அவர் பாகிஸ்தானுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதையடுத்து, குர்பிரீத் சிங்கை போலீசார் இன்று கைது செய்தனர். அதேபோல், அமர்தசரசை சேர்ந்த ஷலிக் மாஷி என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர். இவரும் பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை கொடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.