
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி. மைதானத்தில், குடும்பத்துடன் பொழுதுபோக்க வந்த காவலர் ஒருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காயம்பட்ட காவலர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.