சாத்விக், ரகீஜா அபாரம்.. மதுரை அணியை வீழ்த்திய திருப்பூர் தமிழன்ஸ்

4 hours ago 2

நெல்லை,

டி.என்.பி.எல். தொடரில் நெல்லையில் இன்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் சீகம் மதுரை பாந்தர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணியின் கேப்டன் சாய் கிஷோர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மதுரை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ராம் அரவிந்த் ஒரு ரன்னிலும், பாலசந்தர் அனிருத் ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்தனர். இந்த அதிர்ச்சியிலிருந்து மதுரை அணியால் கடைசி வரை மீளமுடியவில்லை. மதுரை அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மிடில் வரிசையில் களமிறங்கிய சரத்குமார் (31 ரன்கள்) மட்டுமே பொறுப்புடன் ஆடி அணி கவுரமான நிலையை எட்ட உதவினார்.

இறுதி கட்டத்தில் ராஜலிங்கம் அதிரடியாக விளையாடி மதுரை அணி கவுரமான நிலையை எட்ட உதவினார். இதனைத்தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மதுரை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் எடுத்தது. கடைசி பந்தில் ராஜலிங்கம் (22 ரன்கள்) ரன் அவுட் ஆனார். திருப்பூர் தரப்பில் சாய் கிஷோர் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 121 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணியின் சார்பில் அமித் சாத்வீக் மற்றும் ரகீஜா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடி, அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது.

முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்திருந்தநிலையில் இந்த ஜோடியில் ரகீஜா 40 (19) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாத்விக் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

முடிவில் தொடர்ந்து அதிரடி காட்டிய அமித் சாத்விக் 68 (36 பந்துகளில் 4 சிக்சர்கள், 7 பவுண்டரிகள்) ரன்களும், சாய் கிஷோர் 10 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் திருப்பூர் அணி 10.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 121 ரன்கள் எடுத்தது. 

இதன்மூலம் மதுரை அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

Read Entire Article