பழநியில் சாலை பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம்

4 months ago 15

பழநி, ஜன. 11: பழநியில் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று முக்காடு போட்டு ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்ட தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணை தலைவர் மங்களபாண்டியன், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சங்க மாநில துணை தலைவர் ராஜமாணிக்கம் சிறப்புரையாற்றினர். போராட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140ஐ ரத்து செய்ய வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு காலி பணியிடங்களில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் கோட்ட துணை தலைவர்கள் முத்து, செல்வம், கோட்ட இணை செயலாளர்கள் ரங்கசாமி, முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன், கோட்ட செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பழநியில் சாலை பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article