பள்ளம் தோண்டிய போது மண் சரிவு... தொழிலாளி பலி

4 hours ago 3

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் காசர்கோட்டில் தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின் போது கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டிய போது மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 4 தொழிலாளிகள் பள்ளத்தில் சரிந்து மண்ணில் புதைந்தனர்.

இதனையடுத்து விபத்து தொடர்பாக தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எந்திரங்கள் மூலம் அவர்களை மீட்கும் பணி தொடங்கியது.

இந்த நிலையில் 4 தொழிலாளர்களில் 3 பேரை உயிருடன் மீட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் எதிர்பாராதவிதமாக ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article