பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

4 months ago 13

திண்டுக்கல், ஜன. 6: திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக்கோரி வழக்கறிஞர் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் குமரேசன் தலைமை வகிக்க, சங்கத்தின் செயலாளர் கென்னடி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மூத்த வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article