நாமக்கல்: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கும்பல் ராசிபுரத்தில் பிடிபட்டது. வாகன சோதனையின் போது அதிவேகத்தில் வந்த பைக்கை பிடித்து விசாரிக்கையில், பல திருட்டு வழக்குகளில் தேடப்பட்ட சென்னையைச் சேர்ந்த டேவிட் (24), மணி, திருப்பூரைச் சேர்ந்த மணிகண்டன் (47) மூவரும் பிடிபட்டனர். கைது செய்யும் போது டேவிட், மணிகண்டன் இருவரும் தப்பி ஓடுகையில் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கும்பல் ராசிபுரத்தில் பிடிபட்டது!! appeared first on Dinakaran.