பலமனேர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 311 மனுக்கள் பெறப்பட்டது

3 hours ago 2

*கலெக்டர், இணை கலெக்டர் பங்கேற்பு

சித்தூர் : பலமனேர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட 311 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற இருந்த மக்கள் குறைதீர்வு கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்ட நிலையில், பலமனேர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று வழக்கம் போல் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் சுமித் குமார், இணை கலெக்டர் வித்யாதாரி, தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சர் அமர்நாத் ரெட்டி ஆகியோர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், குடிநீர் வசதி, நில ஆக்கிரமிப்பு செய்துவர் மீது நடவடிக்கை, முதியோர் உதவித்தொகை , சுடுகாடுக்கு வழி, ரேஷன் கார்டு, இலவச வீட்டு மனை பட்டா, சுகாதார வசதி, கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 311 மனுக்களை வழங்கினர்.

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் ஓரிரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

அதேபோல் சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் வழங்கிய மனுக்களை அனுப்பி வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இந்த மனுநீதினால் முகாமில் டிஆர்ஓ மோகன் குமார், ஆர்டிஓ ஸ்ரீநிவாஸ், ஜில்லா பரிசுத் முதன்மைச்செயல் அலுவலர் ரவிக்குமார் நாயுடு உள்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post பலமனேர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 311 மனுக்கள் பெறப்பட்டது appeared first on Dinakaran.

Read Entire Article