சென்னை: பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட லாரியை 10 கி.மீட்டர் தூரம் வரை விரட்டிப் பிடித்த போக்குவரத்து போலீஸாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்து சான்று வழங்கினார்.
தாம்பரம் காவல் ஆணையரகம் எல்லைக்கு உட்பட்ட மஹிந்திரா சிட்டி, ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் மறைமலைநகர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ் காந்தி, காவலர் மோகன்ராஜ் ஆகியோர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் கடந்த 20ம் தேதி ஈடுபட்டிருந்தனர். அப்போது, பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து டாரஸ் லாரி ஒன்று போக்குவரத்து சிக்னலை பின்பற்றாமல் சென்றது.