
புதுடெல்லி,
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் பலியானார்கள். நாட்டையே அதிர வைத்துள்ள இந்த சம்பவம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து இருந்தன.
இந்தநிலையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோர் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் பேசி வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.