சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகின்றன. முடிவுகள் எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது. இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே. இனிதான் உங்களின் சிறப்பான ‘பேஸ்’ அமையவுள்ளது என்ற ‘positive outlook’-உடன் இந்தத் தேர்வு முடிவுகளை அணுகுங்கள். பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணைநில்லுங்கள்! என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
The post பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் appeared first on Dinakaran.