திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று 85,078 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 35,791 பக்தர்கள் தலைமுடி காணிக்கையாக செலுத்தினர்.
உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.2.67 கோடி காணிக்கை கிடைத்தது. இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்பளக்சில் 21 அறைகளில் பக்தர்கள் நிரம்பியுள்ளனர். இவர்கள் சுமார் 12 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசித்தனர்.
The post திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 21 அறைகளில் காத்திருக்கும் பக்தர்கள் appeared first on Dinakaran.