விருதுநகர், ஜன.21: விருதுநகர் அருகே விதிமீறி பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் ஆமத்தூர் போலீஸ் எஸ்ஐ கணேசன் ஆய்வு செய்தார். அப்போது சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் மூட்டையுடன் நின்றிருந்த ஓ.கோவில்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரனை(62) அழைத்து விசாரணை செய்தார். அவர் மூட்டையில் உரிய உரிமம் இன்றி பட்டாசு திரி வைத்திருப்பது தெரியவந்தது. 20 குரோஸ் பட்டாசு திரியை பறிமுதல் செய்து ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.
The post பட்டாசு திரி பறிமுதல் appeared first on Dinakaran.