படகுகளில் பொதுமக்களை ஏற்றிச் செல்ல கூடாது: மீனவர்களுக்கு எச்சரிக்கை

3 weeks ago 5

 

தொண்டி, ஜன.11: தொடர் விடுமுறையின் போது படகுகளில் பொது மக்களை ஏற்றிச் செல்லக் கூடாது என தொண்டி மற்றும் சுற்று வட்டார மீனவர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பண்டிகை காலங்களில் தொண்டி மற்றும் சுற்று வட்டாரத்திற்கு வரும் பொதுமக்களை, அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடலில் படகு சவாரிக்கு அழைத்துச் செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.

இதை தடுக்க பல்வேறு நடவடிக்கையை மீன் வளத் துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆற்றங்கரை முதல் எஸ்.பி.பட்டினம் வரையிலும் உள்ள மீனவர்களுக்கு மீன்வளத் துறை ஆய்வாளர் அபுதாஹிர், எஸ்.ஐ குருநாதன் ஆகியோர், விதிகளை மீறி படகுகளில் பொதுமக்களை ஏற்றிச் சென்றால் படகு பறிமுதல் செய்யப்படும், டீசலுக்கான மானியம் ரத்து செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

The post படகுகளில் பொதுமக்களை ஏற்றிச் செல்ல கூடாது: மீனவர்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article