நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காங். நாளை ஆலோசனை

23 hours ago 2

புதுடெல்லி: நே ஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நாளை ஆலோசனை நடத்துகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்க துறை, டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதுபற்றி விவாதிக்க காங்கிரஸ் கட்சி தனது பொதுச்செயலாளர்கள், துணை அமைப்புகளின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் கூட்டத்துக்கு நாளை ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், நாளை மாலை 4 மணிக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் கட்சி தலைமையை குறிவைப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது பற்றி முடிவு எடுக்கப்படுகிறது.

The post நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காங். நாளை ஆலோசனை appeared first on Dinakaran.

Read Entire Article