நெல்லையில் மீண்டும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதால் அதிர்ச்சி!

2 hours ago 1

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தேசிய நெடுஞ்சாலை அருகே மருத்துவ கழிவுகள் மீண்டும் கொட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியின் புறநகர் பகுதியான முக்கூடல் மற்றும் சுத்தமல்லி உள்ளிட்ட இடங்களில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் கடந்த சில வாரங்களுக்குமுன் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து, மருத்துவ கழிவுகளை கேரள அரசு முழுமையாக அகற்ற உத்தரவிட்டது. இதை தொடர்ந்து லாரிகளில் மருத்துவ கழிவுகள் அள்ளி எடுத்து செல்லப்பட்டிருந்தன. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்து 5-க்கும் மேற்பட்டோரை கைது செய்திருந்தனர்.

Read Entire Article