நெல்லை, மார்ச் 11: இஎஸ்ஐ துணை இயக்குநர் அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐ) நெல்லை துணை மண்டலம் சார்பில் இஎஸ்ஐ திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு ஏதாவது குறை இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்ய மாதம் தோறும் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான குறை தீர்க்கும் முகாம் நாளை (12ம் தேதி) மாலை 4 மணிக்கு இஎஸ்ஐசி துணை மண்டல அலுவலகத்தில் வைத்து நடக்கிறது. முகாமில் இஎஸ்ஐசி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர், துணை மண்டல அலுவலக பொறுப்பு அதிகாரி, மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் மற்றும் இஎஸ்ஐ திட்ட மருந்தக மருத்துவ அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பயனீட்டாளர்கள், குறைகள் ஏதேனும் இருந்தால் முகாமில் கலந்து கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post நெல்லையில் நாளை இஎஸ்ஐ குறை தீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.