திருநெல்வேலி: திருநெல்வேலி டவுனிலுள்ள பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை அல்வாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு வாங்கி ருசித்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், டவுனில் உள்ள இருட்டுக்கடை அல்வா கடைக்கு சென்று அங்குள்ளவர்களிடம் கலந்துரையாடினார்.
பின்னர் அல்வாவை வாங்கி ருசித்து சாப்பிட்டார். மேலும் திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல பேராயர் பர்னபாஸ், குழு மண்டல உறுப்பினர் ஜெபராஜ் மற்றும் நிர்வாகிகளையும் சந்தித்து பேசினர். அப்போது அமைச்சர் பி. கீதாஜீவன், தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் ஹெமில்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதுபோல் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார். நெல்லையில் 3 கி.மீ. தூரத்துக்கு ரோடு ஷோ: மக்களிடம் கைகொடுத்து மனுக்களை பெற்ற முதல்வர் - வழிநெடுக திரண்டு வரவேற்றதால் உற்சாகம்