சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், “ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள், சில நாட்களுக்கு முன்பு, கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களது படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.