தென்காசி/ திருநெல்வேலி/ தூத்துக்குடி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றும் மழை பெய்தது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பரவலாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 79 மி.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு பகுதியில் 74, காக்காச்சி பகுதியில் 67, மாஞ்சோலையில் 60, சேர்வலாறில் 52, பாபநாசத்தில் 51, ராதாபுரத்தில் 48, களக்காட்டில் 43.60, மூலக்கரைப்பட்டியில் 40, நாங்குநேரியில் 27.60, கன்னடியன் அணைக்கட்டில் 25.20, அம்பாச முத்திரத்தில் 25, மணிமுத்தாறில் 23.60, சேரன்மகாதேவியில் 23.40, பாளையங்கோட்டையில் 9.20, கொடுமுடியாறு அணையில் 7, நம்பியாறு அணையில் 5, திருநெல்வேலியில் 4.60 மி.மீ. மழை பதிவானது.