தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஏற்றார்போல் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு கோரிக்கை

3 hours ago 1

சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு கோரிக்கை வைத்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அக்குழுவின் தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை நிருபர்களிடம் கூறியதாவது:

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் அரசு மருத்துவர்களுக்கு தரப்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்திய பிறகும் அதை தமிழக அரசு செயல்படுத்தவில்லை.தற்போது தமிழகம் முழுவதும் முதல்வர் மருந்தகம் தொடங்கி உள்ளது. இருப்பினும் அரசு மருத்துவர்களை தொடர்ந்து தங்கள் ஊதியத்திற்காக போராட வைக்கலாகாது.எனவே இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வருகின்ற மார்ச் 18ம் தேதி முதல் தமிழக முதல்வருக்கும், தேசிய மருத்துவ ஆணையத்துக்கும் மின்னஞ்சல் அனுப்பப்படும்.

அதனை தொடர்ந்து மார்ச் மாதம் 19ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சென்னை மருத்துவ கல்வி இயக்குநர் வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தப்படும். மேலும் ஜூன் 11ம் தேதி மேட்டூர் மருத்துவர் கல்லறையில் இருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை மேற்கொள்வது. எனவே தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு போராட்டத்திற்கு முன்னதாகவே மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, உற்சாகமாக பணியாற்றிட வழிவகுக்க வேண்டுகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.

 

The post தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஏற்றார்போல் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article