தக்கலை, பிப்.7: தக்கலை அருகே உள்ள பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் முகேஷ்குமார் (37). வேன் டிரைவர். இவருக்கு திருமணமாகி ஆஷாதேவி (34) என்ற மனைவியும், 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர். கடந்த 3ம் தேதி பொருட்கள் வாங்குவதற்காக முகேஷ்குமார் பைக்கில் குமாரகோவில் பகுதிக்கு சென்றார். பின்னர் பொருட்கள் வாங்கிவிட்டு குமாரகோவில் விலக்கில் வந்தபோது நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதனால் பைக்கில் இருந்து முகேஷ்குமார் நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை தக்கலை தீயணைப்பு படையினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முகேஷ்குமார் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நாய் குறுக்கே பாய்ந்ததால் பைக்கில் இருந்து விழுந்து டிரைவர் பலி appeared first on Dinakaran.