''நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் அதானி, அம்பானிக்காக பாஜக அரசு சட்டங்களை இயற்றுகிறது'' - திருமாவளவன் குற்றச்சாட்டு

3 hours ago 2

சென்னை: “உழைக்கும் மக்களின் உரிமைகள் மென்மேலும் நசுக்கப்படும் நிலை தொடர்கிறது. தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவன பெருமுதலாளிகளும் வலுப்பெற்று வருகின்றனர். அதானிகளும் அம்பானிகளும் இங்கே தனிப்பெரும் முதலாளிகளாக வளர்ந்துள்ளனர். அவர்களுக்காகவே இங்குள்ள பாஜக அரசு கொள்கைகளை வரையறுத்து, சட்டங்களை இயற்றி, நாட்டின் வளர்ச்சிக்காக என நடைமுறைப்படுத்தி வருகிறது,” என்று விசிக தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “உழைப்பைப் போற்றும் உன்னத நாளான மே நாளில் உலகத் தொழிலாளர்கள் யாவருக்கும் விசிக சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உழைக்கும் மக்களுக்கு எதிரான சுரண்டல் கொடுமை உலகெங்கும் காலமெல்லாம் தொடர்கிறது. அதனை எதிர்த்து உழைக்கும் வர்க்கமும் இடையறாது போராடிக் கொண்டே உள்ளது.

Read Entire Article