நாடாளுமன்றத்தில் அதானி உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை பேசுவோம்: திருமாவளவன் பேட்டி

3 months ago 10


சென்னை: விபி சிங் நினைவு நாளை ஒட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தஞ்சை மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க ஒன்றிய அரசு மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதானி பிரச்னை, உத்திரபிரதேசத்தில் 3 பேர் சுட்டுக்கொலை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசுவோம். மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வர பாஜ முயற்சிக்கிறது.

அதனை எதிர்க்கட்சிகள் எதிர்ப்போம். இசைவாணி பாடியது மத உணர்வை காயப்படுத்தும் பாடல் அல்ல, பெண்ணியத்தின் குரல். அதானி பிரச்னை பெரிதாக்கப்படுவதால் அதனை திசைத்திருப்ப இசைவாணி பாடலை கையில் எடுத்துள்ளனர் பாஜவினர். இசைவாணியை கைது செய்ய வேண்டும் என்று குரல் எழுப்புவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

The post நாடாளுமன்றத்தில் அதானி உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை பேசுவோம்: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article