சென்னை: சிறு வியாபாரிகளுக்கான தொழில் உரிம கட்டணத்தை தமிழக அரசு குறைத்திருப்பதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் வி்க்கிரமராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு திடீரென தொழில், வணிக உரிமக்கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியது, வணிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளித்து பல்முனை அழுத்தம் கொடுக்கப்பட்டது.