சென்னை ஐஐடிக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சருக்கு எதிர்ப்பு: மாணவர் கூட்டமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

3 hours ago 1

சென்னை: சென்னை ஐஐடிக்கு வருகை தந்த மத்திய கல்வி இணை அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஐஐடி அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேசியக் கல்வி கொள்கையையும், மும்மொழிக் கொள்கையையும் ஏற்றுக் கொண்டால் தான், தமிழகத்துக்கு தரவேண்டிய கல்விக்கான நிதியை தருவோம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இதற்கு, தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், சென்னை ஐஐடியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வருகை தருவதாக தகவல் வெளியானது.

Read Entire Article