நாகராஜன் நன்றி கூறினார் கள்ளத்தனமாக மது விற்ற 2 பேர் கைது

2 months ago 13

 

தஞ்சாவூர், நவ. 18: தஞ்சை அருகே அம்மாபேட்டை பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் எஸ்.பி.ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு பாபநாசம் உட்கோட்டம் அம்மாபேட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட முருகன் கோயில் பகுதியில், போதைப்பொருட்கள் விற்பனை செய்து வருவதாக அம்மாபேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையிலான போலீசார் அடங்கிய குழு அங்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னராஜ்(20), சசிகுமார் (48) ஆகியோர் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைதுசெய்து, அவர்களிடமிருந்து 75 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post நாகராஜன் நன்றி கூறினார் கள்ளத்தனமாக மது விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article