நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு தொடர்பாக காவல்துறை அறிக்கை வெளியீடு

5 hours ago 2

சென்னை,

'கொக்கைன்' போதைப்பொருள் பயன்படுத்தியதாக தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் ஸ்ரீகாந்தை நேற்று சென்னையில் போலீசார் கைது செய்தனா். அவரது வீட்டில் நடந்த சோதனையில் 7 'கொக்கைன்' கவா்கள், 1 கிராம் 'கொக்கைன்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான நடிகர் ஸ்ரீகாந்த் மீது போலீசார் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்படி போதைப்பொருள் பயன்படுத்துவது மற்றும் கடத்தி விற்பது, போதைப்பொருள் பதுக்கி வைப்பது, போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்து சதி செய்தது, போதைப்பொருளை கூட்டாக கடத்துவது என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் எந்த அளவுக்கு போதைப்பொருள் கடத்தினார்களோ அல்லது பயன்படுத்தினார்களோ அதற்கு ஏற்ப தண்டனை வழங்கப்படுவதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு 2 ஆண்டுகள் வரை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நடிகர் ஸ்ரீகாந்துக்கு அடுத்த மாதம் (ஜூலை) 7-ந் தேதி வரை கோர்ட்டு காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவர் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, நடிகர் ஸ்ரீகாந்த் கைது தொடர்பாக காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: போதைப்பொருள் வழக்கில் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். ஸ்ரீகாந்தின் வீடு முழுமையாக செய்து ஆதாரங்களுடன் அவர் கைது செய்யப்பட்டார். பிரசாத் என்பவருக்கு பெங்களூரு பிரதீப் அவரது கானா நாட்டு நண்பர் ஜான் மூலம் கொக்கைன் விநியோகம் செய்துள்ளார். போதைப்பொருள் வழக்கில் தலைமறைவாக உள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article