வேதாரண்யம், ஜன.21: தோப்புத்துறையில் நடைபெற்ற மனிதேநய ஜனநாயக கட்சி நகர கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர செயலாளர் செல்லப்பா தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் சேக் அகமதுல்லா, மருத்துவ அணி துணை செயலாளர் சதாம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெரிய குத்தகை அக்கறைப் பள்ளி வளாகத்தில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்க வேண்டும் என்றும்,
தோப்புத்துறை கிழக்கு எல்லையில் ஓடும் உப்பாற்றங்கரையில், லெப்பை பள்ளி முதல் புதுத்தெரு வரை பெண்கள் நடை பயிற்சி செய்யும் வகையில் நடைமேடை அமைத்து நகராட்சியை கேட்டுக் கொள்வது, ஜனவரி 26ம் தேதி அன்று குடியரசு தின விழாவை வழக்கம்போல் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது.
The post தோப்புத்துறையில் மனித நேய ஜனநாயக கட்சி நகர கூட்டம் appeared first on Dinakaran.