சென்னை,
தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கின்றன. தேர்வில் வெற்றி பெற்று, உயர் கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் துவண்டு விடாமல், வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் துணை நிலைத் தேர்வுக்கு, முழு நம்பிக்கையுடன் தங்களைத் தயார் செய்து, தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
பல்வேறு வாய்ப்புகளும், புதிய துறைகளும் உருவாகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், மாணவ மாணவியர் அனைவருக்கும் சிறப்பானதொரு எதிர்காலம் காத்திருக்கிறது.
மாணவ, மாணவியர் அனைவரும், உயர்கல்வியில் தாங்கள் விரும்பும் துறையைத் தேர்ந்தெடுத்து, சாதனை படைக்க இறைவன் அருள் புரியட்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.