ஊட்டி : தேயிலை பூங்காவில் தேயிலை நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் உள்ளன.
இங்குள்ள பண்ணைகளில் பல்வேறு வகையான மலர் நாற்றுக்கள், மூலிகை நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் பழ ரசங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், பல்வேறு வகையான வாசனை திரவிய பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. பூங்கா மற்றும் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகையான பழங்கள் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலு, ஜாம், ஊறுகாய் மற்றும் பழ ரசங்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு மரக்கன்றுகள், தேயிலை நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக, ஊட்டி அருகே தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் தேயிலை நாற்று, பேரிக்காய் மற்றும் குப்ரஸ் உட்பட பல்வேறு வகையான நாற்றுகள் மற்றும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவைகள் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுவதற்காக தற்போது தேயிலை பூங்காவில் 2 ஆயிரம் தேயிலை நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளது. இந்த நாற்றுகள் உற்பத்தி செய்த பின், விவசாயிகளுக்கு குறைந்த விலையில், விற்பனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post தேயிலை பூங்காவில் நாற்று உற்பத்தி தீவிரம் appeared first on Dinakaran.