சென்னை: சென்னை தேனாம்பேட்டை 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் வாயு கசிவு ஏற்பட்டதால், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 14 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் சுகாதாரத்துறையின் கீழ் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 1,353 ஆம்புலன்ஸ்கள் மாநிலம் முழுவதும் இயக்கப்படுகின்றன.