தென்னாம்பட்டினம் ஊராட்சியில் 5 ஆண்டு வளர்ச்சி பணிகள் கலந்துரையாடல் கூட்டம்

4 months ago 11

 

சீர்காழி, ஜன. 8: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்னாம்பட்டினம் ஊராட்சியில் உள்ளாட்சி நிர்வாகம் 5 ஆண்டு முடிவடைவதை முன்னிட்டு ஊராட்சி தலைவர் சரளா கோபாலகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 5 ஆண்டுகளாக நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து கலந்துரையாடினர். தொடர்ந்து ஊராட்சி தலைவர் அனைவரும் சால்வை அணிவித்து கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. கூட்டம் முடிவில் ஒருவருக்கொருவர் கடந்த ஐந்தாண்டு காலத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவு கூர்ந்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றனர். கூட்டத்தில் சீர்காழி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ராஜசந்திரசேகர், ஊராட்சி மன்ற துணைத் எழிலரசி, மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post தென்னாம்பட்டினம் ஊராட்சியில் 5 ஆண்டு வளர்ச்சி பணிகள் கலந்துரையாடல் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article