தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது: 3.3 கிலோ பறிமுதல்

3 hours ago 2

தூத்துக்குடி நகர உட்கோட்ட பகுதியில் நேற்று தனிப்படை போலீசார் நேற்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தாளமுத்துநகர் காமராஜர்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நபர் சுற்றித்திரிந்தார்.

அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த கோவில்பிச்சை மகன் செல்வேந்திரன் (வயது 57) என்பதும் அவர் கஞ்சா விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, செல்வேந்திரனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 3 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article