திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகனம் நிறுத்துமிடம் விரிவாக்கம்

6 hours ago 4

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகனம் நிறுத்துமிடத்தில் வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"திருமங்கலம் மெட்ரோ நிலையத்தின் துணை கட்டிடத்திற்கு அருகில் தற்போதுள்ள B2 வாகன நிறுத்தும் பகுதியில் கூடுதலாக ஒரு தளம் வாகன நிறுத்தும் (Mezzanine level parking) இடமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட வாகனம் நிறுத்துமிடத்தில் கூடுதலாக 400 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.

தற்போது, திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தின் B2 வாகனம் நிறுத்துமிடம் 1,000 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியைக் கொண்டுள்ளது. இந்த புதிய விரிவாக்கம் பயணிகளுக்கு கூடுதல் வசதியை வழங்கி, மெட்ரோ சேவையை மேலும் எளிமையாகவும் திறம்படவும் பயன்படுத்த ஊக்குவிக்கும்.

மேம்படுத்தப்பட்ட இந்த வாகன நிறுத்துமிடத்தை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) பி.கோபிநாத் மல்லியா திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ஆலோசகர் (மின்சாரம் மற்றும் இயந்திரவியல்), எஸ்.கே.நடராஜன், கூடுதல் பொது மேலாளர் (மெட்ரோ ரெயில் மற்றும் இயக்கம்) எஸ்.சதீஷ் பிரபு மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article