தூங்கா நகரை தூய்மை நகராக மாற்றுவாரா? - மதுரை மாநகராட்சி முதல் பெண் ஆணையருக்கான சவால்கள்

2 hours ago 1

மதுரை: மதுரை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள சித்ராவுக்கு அன்றாட பணிகளை தாண்டி பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. மதுரை மாநகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்ற சித்ராவுக்கு அமைச்சர்கள், மேயர், திமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல அலுவலக அதிகாரிகள்-கவுன்சிலர்களிடையே நீடிக்கும் பனிப்போர், மண்டலத் தலைவர்களின் அரசியல் ஆகியவற்றை தாண்டி, மாநகராட்சியில் நிறைவேற்ற வேண்டிய பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பணிகள் சவால்களாக நிற்கின்றன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தூய்மை பாரதம் திட்டத்தில் மற்ற மாநகராட்சிகளை ஒப்பிடும்போது மதுரை மாநகராட்சி பின்தங்கியே உள்ளது. தூங்கா நகரான மதுரையை தூய்மையான நகரமாக மாற்றும் திட்டத்தை இதுவரை வந்த எந்த ஆணையர்களாலும் சாதிக்க முடியவில்லை. கடந்த காலத்தில் தூய்மைப் பணியாளர்கள் காலை 6-11 மணி, பிற்பகல் 2-5 மணி வரை பணிபுரிந்தனர். ஆனால், தற்போது காலை 7 மணிக்குதான் பணிக்கு வருகின்றனர். பிற்பகலில் வருவதில்லை.

Read Entire Article