தீபாவளிக்கு தனியாரிடம் வாடகைக்கு எடுத்த ஆம்னி பேருந்துகள் சுமூகமாக இயக்கம்: சிவசங்கர்

6 months ago 24
தனியாரிடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட பேருந்துகள் வழக்கமான கட்டணத்திலேயே எவ்வித பிரச்னையும் இன்றி இயக்கப்பட்டதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆய்வு செய்த அமைச்சர், தீபாவளி கொண்டாடுவதற்காக பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர் செல்லும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிவித்தார். அரசுப் பேருந்துகளில் பயணிக்க கடந்தாண்டு ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில் இந்தாண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்ததாக கூறினார்.
Read Entire Article