திருத்தணி: திருவாலங்காடு அருகே நடந்த விபத்தில் பைக் ஓட்டிச் சென்ற வாலிபர் மற்றும் நடந்து சென்ற கூலித் தொழிலாளி ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த தேசப்பன் என்பவரது மகன் ஷியாம் குமார் (19) நேற்று இரவு சக்கரமல்லூர் கிராமம் அருகே பைக்கில் வேகமாக சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது அவரது பைக் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஷியாம் குமார் மற்றும் நடந்து சென்றவர் என 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதில் சாலையை கடந்தவர் கடலூர் மாவட்டம், எஸ்கே பாளையத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான குமார் (47) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவாலங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருந்தவர்கள் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 பேர் இறந்த சம்பவம் திருவாலங்காடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
The post திருவாலங்காடு அருகே விபத்தில் 2 பேர் பலி appeared first on Dinakaran.