திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்ததில் 3 பேர் உயிரிழப்பு: என்ன நடந்தது?

4 hours ago 5

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே கனமழையால் வீட்டு திண்ணையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மதுரை திருப்பரங்குன்றம் அருகேயுள்ள வலையங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.

அப்போது, முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அம்மாபிள்ளை (65), அவரது பேரன் வீரமணி (10) மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த வீரணன் மனைவி வெங்கட்டி (55) ஆகியோர் அம்மாபிள்ளையின் வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

Read Entire Article