சென்னை: சிறைகளில் சாதி அடிப்படையில் பிரிவினை கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக உள்துறைச் செயலர் தீரஜ்குமார், அரசிதழில் வெளியிட்ட அறிவிக்கை: சிறைக்கு கைதிகள் வரும்போது, சாதி குறித்த தகவல்களை கேட்டுப்பெறக்கூடாது. பதிவேடு, ஆவணங்களில் சாதி விவரங்களை இடம்பெறச் செய்யக்கூடாது.
சாதி அடிப்படையில் பிரிவினைக் காட்டவோ, பிரித்து வைக்கவோ கூடாது. சாதி அடிப்படையில் பணிகளை ஒதுக்கீடு செய்யக்கூடாது. குறிப்பாக, மனிதக் கழிவுகளை சுத்தம் செய்ய வைப்பதோ, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடச் செய்வதோ கட்டாயம் கூடாது. இவ்வாறு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.