திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு வேலூரில் மைனர் பெண் கர்ப்பம்

4 months ago 13

வேலூர், ஜன.5: பெங்களூருவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் விடுமுறை நாட்களில் கொணவட்டத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வாராம். அப்போது அதே பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (23). என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து உள்ளனர். இந்நிலையில் 2024 ஜூலையில் வாணியம்பாடி புத்துக் கோயிலில் இருவரும் திருமணம் செய்து விக்னேஷ் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதால் வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றுள்ளார். அவர் சிறுமி என்பதால் மருத்துவமனையில் இருந்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு வேலூரில் மைனர் பெண் கர்ப்பம் appeared first on Dinakaran.

Read Entire Article