சென்னை: தமிழ் சினிமா உலகில் நுழைந்து 50 ஆண்டுகள் ஆவதையொட்டி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அன்புடன் “இசைஞானி” என அழைக்கப்பட்டவர் இளையராஜா. அந்த பெயரே இன்றைக்கு தமிழரின் இசை அடையாளமாக உலகெங்கும் ஒலிக்கிறது.