திருமண ஆசை காட்டி சிறுமி பாலியல் வன்கொடுமை; இளைஞர் கைது

1 day ago 1

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த இளைஞர் அரவிந்த் (வயது26). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த 16 வயதுடைய ஒரு சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 8ம் வகுப்புவரை படித்துவிட்டு அந்த சிறுமி அங்குள்ள வலை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்

இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சிறுமியின் வீட்டிற்கு முருகன் சென்றுள்ளார். பின்னர் சிறுமியிடம் நைசாக பேசி அந்த பகுதியில் உள்ள நூலக கட்டிடம் அருகே அழைத்து சென்று திருமண ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து வீட்டுக்கு சென்ற சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான அரவிந்தை தேடி வந்தனர். அவர் மைசூரில் தலைமறைவாக இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அரவிந்த் நாகர்கோவிலில் உள்ள போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். அரவிந்த் மீது ஏற்கனவே 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article