திருப்பூர்: அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் இன்று (பிப்.16) காலை அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
இதனை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், 4-ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இந்த போட்டிகளை தொடங்கி வைத்தனர்.