“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதநல்லிணக்கத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” - பெ.சண்முகம்

2 hours ago 3

புதுக்கோட்டை: “வாக்கை மாற்றி அமைக்கும் சக்தி பெரியாருக்கு இல்லை என்று கூறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை?” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாததால் திமுக அரசு மீது ஆசிரியர், அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதேநிலை நீடித்தால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அரசுக்கு எதிரான நிலையில்தான் அவர்கள் இருப்பார்கள். அதற்கு முன்பாக கோரிக்கையை நிறைவேற்றினால்தான் மீண்டும் திமுக ஆட்சியை கைப்பற்ற முடியும். இல்லையேல், அதிருப்தியாளர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள்.

Read Entire Article